Monday, May 4, 2015

படிக்கப் படிக்க தெவிட்டாத இன்பம்.

அழகின் சிரிப்பு என 
அல்லி மலர்வது போல 
அள்ளிப்பருகத்தூண்டும் 
அமுதம் கற்கண்டு அன்னம் போல 
கவிதை ஒன்று எனது வலை அன்பர் +
பிரான்ஸ் கவிஞர் பாரதிதாசன் வலையில் இன்று 

படிக்கப் படிக்க தெவிட்டாத இன்பம். 
இங்கே அதற்கான வழி. 

அதற்கு நான் இட்ட 
பின்னூட்டம்.


இமயத்திலிருந்து வரும் கங்கை நதி போல் அல்லவா 
இக்கவிதை தங்கள் இதயத்தில் இருந்து பொங்கி வருகிறது !!!

இந்தோள ராகத்திலே  மெட்டு  இட்டு, 
இன்று நீவிர் துதி பாடும் 
ஈசன் வேஅமுதம் ங்கடவன் பாதங்களில்  அர்ப்பணிப்பேன். 

சுப்பு தாத்தா.


துளசி மேடம் வலைப்பதிவு ரொம்ப நாள் கழிச்சு போனேன். அவங்க இப்ப குருவாயூர் பக்கம் டூர்லே இருக்காக.

அவங்க  பிரியாணிக் கட்டுரையே , சாரி, பிரயாணக் கட்டுரையே எப்பவுமே எனக்கு ஒரு ஆன்மீக தொடர் இலக்கியம். 
சுவாரசியமான செய்திகள் வெளியிடுவதில் அவரை மிஞ்ச யாருமே இல்லை. இப்ப கோபால் சார் தான் சென்சார் போர்டு சீப்  என்று வேறு சொல்லியிருக்காரு. 

+Tulsi Gopal 
தலைப்பைப் பார்த்ததும் பயந்தே போய் விட்டேன். 

ஒரு வரி விடாம, தப்பு, தப்பு, ஒரு எழுத்து கூட விடாம,
படிச்சு முடிச்சப்பறம் தான் தெரியுது. 

என்னது..ஒரு திகில் தலைப்பு வச்சுட்டீக...

நானும் திருச்சூர் க்கு சென்று இருக்கிறேன். குருவாயூர் லே பாஞ்ச ஜன்யம் விருந்தினர் வீட்டில் ( கஸ்ட் ஹௌஸ் ) தங்கியிருக்கிறேன். 
கேசவன் இப்ப சிலையா இருக்கார். நான் உயிரோட இருக்கும்போதே பாத்திருக்கேனே !!

சுதா.
(சுப்பு தாத்தா தாங்க.. நம்ம மோகன்ஜி  என் பெயரை மாத்தி வச்சுட்டாரு இல்ல) 

No comments:

Post a Comment